ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி - பலர் படுகாயம்
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தை உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள பிரின்ட்செவ்கா கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் இந்த ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில், படுகாயமடைந்த 13 வயது சிறுமியை மருத்துவக் குழுவினரால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், 7 மற்றும் 9 வயதுடைய மேலும் இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதச் செயல்
விளையாட்டு மைதானத்திற்கு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் "கீவ் ஆட்சியின் மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்" என்று ரஷ்ய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Image Credit: NBC News
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |