ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

Champika Ranawaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dhilak Aug 03, 2026 01:33 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!

15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!

பூரண விசாரணை

இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Ex Mp Demands Full Investigation Easter Attack

அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.

எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.

திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு

அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்

அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016