பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது இந்திய இராணுவம் : எல்லைப்பகுதியில் பரபரப்பு
இந்திய எல்லைக்குட்பட்டபஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இதனால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமிர்தசரஸில் ஐந்து ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.இதன்போது அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அட்டாரி கிராமத்தில் மற்றுமொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
வயல்வெளியில் இருந்து துப்பாக்கி பாகங்கள் மீட்பு
டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டனர்.
பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
