இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய (India)கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் (Mannar) மற்றும் யாழ்ப்பாணக் (Jaffna) கடற்பரப்பில் இன்று (20) காலை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
குறித்த கடற்றொழிலாளர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய கடற்றொழிலாளர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் சம்மந்தப்பட்ட 4 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
இதேவேளை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய கடற்றொழிலாளர்களையும் இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
