மன்னாரிற்கு பயணமான இந்திய உயர்மட்டக் குழு!
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா ஜ.கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் மன்னார் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது யாழ்ப்பாண இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கரும் கலந்து கொண்டார்.
இந்திய உயர்மட்டக் குழு மன்னார் பயணம்
இவர்கள் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இலங்கை - இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













