எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!
அமெரிக்காவினால் பாலியல் குற்றாவாளி என அறிவிக்கப்பட்ட எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியிடப்பட்டு தற்போது உலக நாடுகளில் உள்ள முக்கிய பிரதிநிதிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரின் பெயரும் அந்த கோப்புக்களில் இடம்பெற்றுள்ளது.
இவர், இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு இழுபறிகளில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாக சம்பந்தப்பட்டு இந்தியாவுக்கும் ஈழத்தமழிருக்கும் இடையிலான விரிசல்களை அதிகப்படுத்திய நபராகவே பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றினால் பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீனுடன் ஹர்தீப் பூரி தொடர்பை பேணியுள்ளது உறுதியாகியுள்ளது.
இவர் எப்ஸ்டீனின் பாலியல் தொடர்பான விடயங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இவர் செய்துள்ள பல்வேறு விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயங்களை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |