யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கப்போகும் புதிய விமானங்கள்: வெளியானது அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இலங்கையின் இரண்டாம் நிலை விமான நிலையத்தில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாய மாற்றத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த விரிவாக்கமானது, தென்னிந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தும் என்றும் நேரடி விமானங்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் நேரத்தை மிகுதிப்படுத்தும் பயண வசதியை வழங்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஏராளமான மக்கள் பயணம்
இந்த நிலையில், பெங்களூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமானங்களுக்கான அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை மையமாகக் கொண்டு அண்மையில் வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடன் இண்டிகோ எயார்லைன்ஸ் பிரதிநிதிகள் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது, சென்னையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற நிலையில், இரண்டு நகரங்களுக்கிடையில் ஏராளமான மக்கள் பயணம் செய்கிறார்கள்.
இதில் 25,000 க்கும் மேற்பட்ட வருடாந்திர யாத்ரீகர்கள் மற்றும் வணிக மற்றும் ஓய்வு நோக்கங்களுக்காக பயணிக்கும் மற்றவர்களும் அடங்குவர்.
நேரடி விமானங்கள்
இருப்பினும், நேரடி இணைப்பு இல்லாததால், பல பயணிகள் சென்னை அல்லது கொழும்பு வழியாக பயணிக்க வேண்டியுள்ளது, இதனால் பயண நேரம் அதிகமாவதுடன், கூடுதல் செலவுகளும் ஏற்படுகின்றன.
இவ்வாறனதொரு பின்னணியில், இண்டிகோவின் பெங்களூரு - யாழ்ப்பாண நேரடி சேவை இந்த சவால்களைத் தீர்க்கும் என்றும் நேரடி விமானங்கள் அதிக நேரத்தைச் செலவழிக்கும் பயணத்தை குறைக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இண்டிகோ தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே வாராந்திரம் 54 விமானங்களை இயக்குவதுடன், இந்த விமான நிறுவனம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையை கொழும்புடன், இணைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)