அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Feb 10, 2025 08:38 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நேற்றைய தினம் (09.02.2025) நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத்தடைக்கு நாங்கள் தான் காரணம் எனும் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்.

ஏற்கனவே நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் நாம் தான் காரணம் என்று அநுர அரசாங்கம் எம்மீது வீண்பழி போட்டுள்ளது.

இந்த செயற்பாடு எமது குரங்கு சமூகத்தை முற்றாக அழிப்பதற்கான சதித்திட்டம் தான் இதுவோ எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த கால அரசாங்கம் எம்மவர்களை சீனாவிற்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்தார்கள். 

அநுர அரசிற்கு கு.ரங்குப்பிள்ளையின் அவசர திறந்த மடல் | Sudden Power Cut Reported Island Wide

ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் காட்டை அழிக்கிறார்கள். அதனால் மழை பொழிவது இல்லை. நாம் தண்ணீருக்காக ஊருக்குள் வரவேண்டிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். 

மின்மாற்றிகள் அமைக்கும் போது எமது இனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத பொறியியலாளர்கள், அதற்கு ஒரு சபை, அதை அங்கீகரிக்க ஒரு அமைச்சரவை இதற்கு ஒரு தேர்தல் இப்படி பொறுப்பற்றவர்கள் நாட்டை ஆள்வது கவலையாக உள்ளது.

பொறியாளர்கள் இல்லாத காலத்திலேயே ராமர் பாலத்தை எமது சமூகம் அமைத்தது, இதை நீங்கள் வரலாறுகளில் படித்திருப்பீர்கள்.

அவ்வாறு சிந்தனை உள்ள பலம் பொருந்திய இனமான எமது இனத்தின் மீது வீண் பழி போடவேண்டாம் என எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந்த மின் தடைக்கும், தேங்காய் விலையேற்றத்திற்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

இலஞ்ச ஊழல், ஈஸ்டர் தாக்குதல், போன்ற பிரச்சினைகளை கண்டுபிடித்து மக்களுக்கு உண்மையை வெளிக்கொண்டுவர ஆட்சிக்கு வந்த நீங்கள் தற்போது தேவையில்லாமல் தேங்காயும், அரிசியும் என கூத்து காட்டுவதை நிறுத்துங்கள்.

நாங்கள் குரங்கு சேட்டை செய்வதாக கூத்தாடும் நீங்கள் நாடாளுமன்றத்திற்குள் நீங்கள் ஆடும் கேலிக்கூத்திற்கும் வித்தியாசம் இல்லை.

தேர்தல் மேடைகளில் வாய்கிழிய ஜனநாயகம் பேசிய நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூட சொல்வது நியாயமா???

அடுத்தவனை நோக்கி நீங்கள் ஒருவிரல் நீட்டும் போது மற்றைய விரல்கள் உங்களை நோக்கியே உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

மேற்படி தகவல் : வானரங்களின் ஊடகப்பேச்சாளர் - கு.ரங்குப்பிள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024