தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் (SLGTTI) வளப்பற்றாக்குறைகளுடனேயே தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shrithran) தெரிவித்துள்ளார்.
இன்றைய (03) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாரை இலக்கு வைத்து இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதோ அவர்களை நிராகரித்துவிட்டு வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்நிறுவனத்தின் மூலம் தொழிற்கல்வியை நுகரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தசை் சேரந்த மாணவர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாமையும் இந்நிறுவனத்தின் பின்னடைவிற்கு ஒரு காரணமாகும்.
உள்ளக முரண்பாடுகள் இனரீதியான முரண்பாடுகளாக மடைமாற்றப்பட்டு CGTTI இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரால் தமிழ் மாணவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று வரை இலங்கை அரசாங்க வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்படவில்லை.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
