கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தான் இடமாற்றப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆய்வுகள் தடுக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக நான் இடமாற்றப்பட்டேன்.
திடீர் இடமாற்றம்
எனது இடமாற்றம் திட்டமிடப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும் நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது.
என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் அதுவும் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்து போகக்கூடாது.
எனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்பட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன்.
உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன்.” என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
