இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
shavendrasilva
travel restriction
inter province
By Jaso
நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இதன்படி மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்
இது தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு இன்றிலிருந்து மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படும்.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு புதிய சட்டங்கள் அடங்கிய அறிவிப்பு இன்று மாலை வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி