கூட்டமைப்பினர் கூறியது பச்சைப் பொய் : அம்பலப்படுத்திய சுகாஸ்
TNA
M. A. Sumanthiran
By Vanan
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை கோரமுடியாது என சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை காலமும் கூறியது பச்சைப் பொய் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை “ரோம்” பிரகடனத்தில் கையெழுத்திடாதபடியால், இதற்கு சாத்தியமில்லை என அவர் கூறுகிறார்.
காலத்தின் நிரூபணம்
அத்துடன் நாங்கள் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கூறியதே சத்தியம் என்பதையும் காலம் நிரூபித்துக் காட்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலயே இன்றைய தினம் (17.09.2023) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலை இலங்கை அரசைக் காப்பாற்றுவது யார்? தமிழினத்தைக் காட்டிக்கொடுப்பது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரண அறிவித்தல்