திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!
Trincomalee
Anura Karunathilake
By Pavi
இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை ஆய்வு செய்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அனுர கருணாதிலக திருகோணமலை எண்ணெய் தேக்க வளாகத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிலையில் இந்த விடயத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.
அனுர கருணாதிலக
மேலும் திருகோணமலை எண்ணெய் தேக்கங்களை மேம்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசு முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர்களான ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி