கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்திட்டம்; அதிகரிக்கும் கல்வி வலயங்கள்; கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் பாடசாலைகளுக்கு குறித்த இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இணையத்தள வசதி

இலங்கையில் உள்ள ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கல்வி வலயங்கள்

இதேவேளை, நாட்டில் உள்ள கல்வி வலயங்களுக்கு மேலதிகமாக இன்னும் 20 கல்வி வலயங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பின் மூலம் ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.