அமெரிக்க தூதரகத்தின் கடுமையாக அழுத்தங்கள் - அரச உயர் அதிகாரியை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை!
இலங்கை, அமெரிக்க தூதரகத்தின் கடுமையாக அழுத்தங்கள் காரணமாக அரச உயர் அதிகாரி ஒருவரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட அதிகாரியை இந்த மாத இறுதியில் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி ட்ரெவிஸ் கார்ட்னருக்கு விசா வழங்க மறுத்தமை மற்றும் வடக்கில் தமிழர் ஒருவருடன் இணைந்து கார்ட்னர் முன்னெடுத்த இரகசியமான திட்டம் பற்றிய தகவல்களை கண்டறிந்த இந்த சிரேஷ்ட அதிகாரி, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சிரேஷ்ட அதிகாரியின் சேவை காலத்தை நீடிக்கும் கடிதத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன கையெழுத்திட்டுள்ள போதிலும் கண்ணுக்கு புலப்படாத மறைக்கரம் ஒன்றின் நடவடிக்கை காரணமாக அந்த கடிதம் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இயங்கும் 33 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வருடாந்தம் 5 மில்லியன் டொலர்கள் கிடைத்து வருவதாக மேற்கூறிய அதிகாரி கண்டறிந்திருந்ததாக கூறப்படுகிறது.