குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம்

Sarath Fonseka Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka
By Dhilak Jun 11, 2026 05:40 PM GMT
Report

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பொறுப்பாளராக இருந்த 'கே.பி.' என அறியப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான தங்கத்தின் கதி குறித்து அதிரடி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த உயர்மட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த 2009 மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவராக கே.பி. உருவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

தலைவர் பிரபா பரிமாறிய உணவு... பொட்டு –சூசையுடன் சந்திப்பு... உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் !

தலைவர் பிரபா பரிமாறிய உணவு... பொட்டு –சூசையுடன் சந்திப்பு... உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் !

கே.பியின் கைது

எனினும், அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் வைத்து இலங்கை உளவுத்துறை மற்றும் சர்வதேச பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர் கைது செய்யப்பட்டு, இரகசியமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார். 

குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம் | Investigation Into The Gold Seized From Kp

அதன் பின்னர் அவர் அரசாங்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, சமூக சேவை மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கே.பி. கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்த பல டன் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.

பொன்சேகாவின் வாக்குமூலம்

இது குறித்து ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, “2009-ல் கே.பி. கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த தங்கம் அரசாங்கத்தாலும் பாதுகாப்பு அதிகாரிகளாலும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எனக்கு என்ன தெரியும் என்று கேட்பதற்கே நான் அழைக்கப்பட்டேன்.

குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம் | Investigation Into The Gold Seized From Kp

ஆனால், கே.பி. கைது செய்யப்பட்ட அந்தச் சமயத்தில் நான் இராணுவத் தளபதியாகப் பணியாற்றவில்லை, மாறாக, பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியாகவே பதவி வகித்தேன். எனவே, அவரிடமிருந்து ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தால், அது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது. 

அதே ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி நான் அந்தப் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன் என்ற விபரத்தையே ஆணைக்குழுவிடம் விளக்கியுள்ளேன்.” என்றார்.

இதன்படி, தனது பதவிக்காலத்தில் கே.பி. தொடர்பான விவகாரங்களில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், போருக்குப் பிந்தைய காலத்தில் கைப்பற்றப்பட்ட இந்த சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, இந்தத் தங்க இருப்புக்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்பது குறித்த விசாரணையை ஆணைக்குழு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்!

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்!

சங்கிலியன் பூங்கா புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம்! வலுத்துள்ள சர்ச்சை

சங்கிலியன் பூங்கா புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம்! வலுத்துள்ள சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025