ஹோர்மோஸ் நீரிணை பழைய நிலைமைக்கு திரும்பாது! ஈரானின் அறிவிப்பால் சர்வதேசத்திற்கே பேரிடி
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹோர்மோஸ் நீரிணை பிரச்சினைக்கு உடனடி தீர்வு இல்லை என ஈரான் அரசின் முக்கிய பிரமுகரும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாஃப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் ஈரானின் ஆயுதத் தளங்களை முற்றிலும் அழிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடற்படை மற்றும் இராணுவ இருப்பு காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏவுகணை அமைப்புகளில் மாற்றம்
எனவே ஹோர்முஸ் நீரிணை இனி பழைய நிலைக்கு திரும்பாது என கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து, ஈரானின் இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இருப்பினும், கடந்த ஆண்டின் 12 நாள் போரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஈரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் தள வடிவமைப்புகளை மாற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் எந்த சூழ்நிலையிலும் சரணடையாது என்றும், அழுத்தத்திற்கு இடங்கொடுக்காது என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு
போர் முடிந்தபின், மத்திய கிழக்கின் அரசியல் அமைப்பு முற்றிலும் மாறும் என்றும், அமெரிக்கா விரும்புவது போல் எதுவும் நடைபெறாது என்றும் பாகர் கலிபாஃப் கூறியுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கான பிராந்திய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அடைந்த ஒரே இலக்கு முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் கொலை மட்டுமே என குறிப்பிட்ட கலிபாஃப், அதனால் அரசமைப்பு வீழ்ச்சியடையவில்லை என்றும், இளம் மொஜ்தபா கமேனி அவருக்கு மாற்றாக பதவி ஏற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |