இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம்
இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்அவிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பலர் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐந்தாம் இணைப்பு
புதிய இணைப்பு ஈரானிலிருந்து ஏவுகணைகள் வருவதாக எச்சரித்த சில நிமிடங்களில், டெல் அவீவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் பாரிய வெடி சத்தங்கள கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நான்காம் இணைப்பு
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
🚨Once again, millions of Israelis are currently running for shelter as sirens sound all over Israel following another missile launch from Iran🚨 pic.twitter.com/j0TMlGWWP5
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
முன்றாம் இணைப்பு
பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் "சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது" என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அவர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.
இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.
“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
⚠️RAW FOOTAGE: Iran launched multiple ballistic missiles toward Israel in the past hours.
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
The IDF cannot, and will not, allow Iran to attack our civilians. pic.twitter.com/IrDK05uErm
இதன்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இதேவேளை, தாக்குதலில் டெல் அவிவ் பெருநகரப் பகுதியில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மத்திய இஸ்ரேலில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், ஜெருசலேம் நகரிலும் வெடிபோன்ற ஒலிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்தங்கள் தாக்குதல்களா, அல்லது எதிர்ப்பு ஏற்பாடுகளா என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், வானில் பாயும் ஏவுகணைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
அத்துடன், டெல்அவிவ் நகரின் உயரமான கட்டிடங்களை முந்தி பெரும் புகைமூட்டம் பறந்துவந்ததாகவும், அது எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தக்க நடவடிக்கையா, நேரடி தாக்கமா என குழப்பம் புகைமூட்டம் ஏவுகணை தாக்கத்தால் ஏற்பட்டதா, அல்லது அந்த ஏவுகணைகளை இடைமறிக்கும் முயற்சியால் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான பழிவாங்கல் தொடங்கியுள்ளதாக ஈரான் கூறியதாக அதன் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
