எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
Nalinda Jayatissa
By Dilakshan
மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால், எரிபொருள் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
அப்படி விலை உயர்வு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த விலை உயர்வாக இருக்காது என்றும், அதன் கணிசமான பகுதியை திறைசேரியே ஏற்கும் என்றும் அமைச்சர் நளிந்த வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், போர்ச் சூழல் தணிந்தவுடன், தற்போது உயர்ந்துள்ள எரிபொருள் விலையை கூடிய விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |