உலக நாடுகளுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக அடைத்தது ஈரான்
அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாக, உடனடியாக நடமுறைக்கு வரும் வகையில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவை மீறி நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இராணுவ ரீதியாகக் குறிவைத்துத் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முழுயாக முடக்கம்
தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக இந்த முக்கிய நீர்வழிப் போக்குவரத்துபாதை கடந்த சில மாதங்களாகவே ஏற்கனவே முடங்கியிருந்தது.

போருக்கு முந்தைய சாதாரண கால அளவோடு ஒப்பிடுகையில் தற்பொழுது இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து வெறும் 15 வீதமாக மட்டுமே குறைந்திருந்தது.
மோதல் தொடங்கியது முதலே, தங்கள் அனுமதியின்றி கடந்து செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது இந்த முழுயான முடக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |