ஈரானுடனான மோதல் : இங்கிலாந்தின் உதவியை புறம் தள்ளிய ட்ரம்ப்
ஈரானுடனான தற்போதைய இராணுவ நிலைமையை எதிர்கொள்ளும் வகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்துவதில் தனக்கு இங்கிலாந்தின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக வலையமைப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவரது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
எந்த நேரத்திலும் தயாராக உள்ள விமானம் தாங்கி கப்பல்
அந்த அறிக்கையில், நாட்டின் இரண்டு முக்கிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான 'HMS பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ்' ('HMS Prince of Wales)எந்த நேரத்திலும் செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் கூறியது.

அமெரிக்கா சுதந்திரமாக செயற்படும் திறன்
இருப்பினும், பிரிட்டனின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், பிராந்திய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்கா சுதந்திரமாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை தொடர்ந்து சூடுபிடித்து வரும் நேரத்தில் உலக வல்லரசுகளுக்கு இடையிலான இத்தகைய பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியபோது, பிரிட்டன் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்று ட்ரம்ப் முன்பு குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |