அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி
அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய வெப்பமான வானிலையால், இந்த நாட்களில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான நெருக்கடியில் மின்சார அமைப்பு
அதன்படி, மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே ஆயிரக்கணக்கான மெகாவாட்கள் வேறுபாடு இருப்பதால், நாட்டின் மின்சார அமைப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் தெஹ்ரான் உட்பட பல பகுதிகளில், ஒரு திட்டத்தின்படி ஏற்கனவே மின்வெட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பின் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரான் திரும்பத் தவறினால், வரும் நாட்களில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களும் முக்கிய பாலங்களும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் இலக்காக மாறக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்