ஈரானின் இராணுவ தளங்கள் அருகே தீ விபத்து...! அதிகரிக்கும் பதற்றம்
ஈரானில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த இடமருகே உள்ள கட்டடமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், பராந்த் நதி அருகே உள்ள பகுதியில் வானை முட்டும் அளவு புகை எழுந்துள்ளது.
இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்தம்
அணுசக்தி ஒப்பந்தம் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, மத்திய கிழக்கை நோக்கிப் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு வலிமையான பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருந்தது.
மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இச்சூழ்நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |