அமெரிக்கா மீது தாக்குதல் உறுதி: நேரம் இடத்தை தயார் செய்யும் ஈரான் இராணுவம்
தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான்(iran) அறிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதலுக்கான நேரம், தன்மை மற்றும் அளவை தனது இராணுவம் தீர்மானிக்கும் என்றும் அறிவித்தது.
ஐநா சபையின் அவசர பாதுகாப்பு சபைஅமர்வில், ஈரான், அமெரிக்காவிற்கு(us) ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்து, மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
தற்காப்புக்கான உரிமை
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அதிகாலை மூன்று முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் ஐநா தூதுவர் அமீர் சயீத் இரவானி வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்புக்கான உரிமையை ஈரான் முழுமையாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள்" என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நியூயோர்க்கில் அவசர கூட்டம், கூட்டப்பட்டது.
அமெரிக்காவை மோதலுக்குள் இழுத்த நெதன்யாகு
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியதாக சயீத் இரவாணி குற்றம் சாட்டினார். மேலும் இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் கண்டனம் செய்தார்.
தன்னுடைய பிராந்திய நலன்களுக்கு உதவுவதற்காக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தாக்கம் செலுத்தி, அமெரிக்காவை மோதலுக்கு இழுத்ததாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். மேலும், மேற்கத்திய நாடுகளின் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நிராகரிப்பதாக திட்டவட்டமாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
