ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்குத் தமது வான் பாதுகாப்பு அமைப்பு பதிலடி கொடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல ட்ரோன்கள்
இந்தநிலையில், கடந்த இரண்டு மணித்தியாலங்களில், பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தை (Prince Sultan Air Base) நோக்கி வந்த ஆறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சவுதி அரேபியா இடைமறித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் பல ட்ரோன்களையும், ஷய்பா (Shaybah) எண்ணெய் வயலை நோக்கி வந்த ஏவுகணைகளையும் இடைமறித்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இன்று காலை பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்பட்டதுடன், குடியிருப்பாளர்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரானின் புரட்சிகர இராணுவப் படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பல அடுக்கு மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |