இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட போர்க்கப்பல்...! ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் தாக்கப்பட்டதற்கு நிச்சயமாகப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், IRIS Dena போர்க்கப்பலின் மாலுமிகள் ஓர் அமைதியான பணியை முடித்துவிட்டு மீண்டும் ஈரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை வலிமை
அந்த மாலுமிகள் நேரடியாக எந்தப் போரிலும் ஈடுபடாத நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், Dena என்ற பெயரும் மற்றும் அதன் மாலுமிகளின் தியாகமும் ஈரானின் கடற்படை வரலாற்றில் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் கடல் எல்லைகளை இராணுவம் தொடர்ந்து பாதுகாக்கும் மற்றும் இன்னும் கூடுதலான உறுதியுடன் தனது கடற்படை வலிமையை வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |