அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரானில் அரச ஊழியர்களுடன் நடைபெற்ற தொடர் சந்திப்புகளின் போது கருத்து வெளியிட்ட அவர், அத்துமீறிய கோரிக்கைகளை ஈரான் எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும், ஆனால் இந்த மோதல் தொடர்வது நமக்கோ, எதிர்தரப்பிற்கோ அல்லது பிராந்தியத்தின் எதிர்கால சந்ததியினருக்கோ எவ்வித நன்மையையும் தராது என்பதை உணர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய சவால்கள்
பதற்றங்களைக் குறைக்க சாத்தியமான அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி பெசெஷ்கியன், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, நிதி ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் சந்தையைக் கட்டுப்படுத்துவது போன்ற பாரிய சவால்களை ஈரான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.

Image Credit: CNN
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த மோதலால் ஈரானுக்கு சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்ஈ, தங்கள் நாட்டின் தற்போதைய உண்மை நிலவரங்களை மக்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தியுள்ளார். .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |