ஈரான் அதிரடி: மூன்று செயற்கைக்கோள்கள் ஒரே ஏவுதளத்தில்!
ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அடுத்த மூன்று நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.
விண்வெளி
இது குறித்து, ஐ.எஸ்.ஏ எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரியே கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளி திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது.
கண்காணிப்பு
இதன்படி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை இந்த மூன்று செயற்கைக்கோள்கள் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |