அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அவசர கடிதம்
மத்திய கிழக்கு மோதல் உண்மையிலேயே 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' அளிக்கும் செயலா என்று அமெரிக்க மக்களிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் ஒரு பினாமியாக அமெரிக்கா போரில் நுழைவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு புதன்கிழமை பிற்பகல் x தளத்தில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ மேலாதிக்கம்
பெஷெஷ்கியன் தனது கடிதத்தில், அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகவும்இ இஸ்ரேலால் தூண்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "அமெரிக்கா, ஐரோப்பா அல்லது அண்டை நாடுகளின் மக்கள் உட்பட மற்ற நாடுகளின் மீது ஈரானிய மக்களுக்கு எந்த விரோதமும் இல்லை" என்று அவர் கூறினார்.

பல்வேறு காலகட்டங்களில் வரலாற்று மற்றும் புவியியல் ரீதியான சாதகங்கள் இருந்தபோதிலும், ஈரான் தனது நவீன வரலாற்றில் ஒருபோதும் ஆக்கிரமிப்பு, விரிவாக்கம், காலனித்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்ததில்லை," என்று அவர் வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்பு, படையெடுப்பு மற்றும் உலக வல்லரசுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களைத் தாங்கிய பின்னரும், மற்றும் அதன் பல அண்டை நாடுகளை விட இராணுவ மேலாதிக்கம் பெற்றிருந்த போதிலும் ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை.
ஆயினும், தன்னைத் தாக்கியவர்களை அது உறுதியுடனும் துணிச்சலுடனும் முறியடித்துள்ளது.
ஈரானைச் சுற்றியுள்ள பகுதியில் அமெரிக்கா தனது இராணுவப் படைகளின் கணிசமான பகுதியை நிலைநிறுத்தியுள்ளது என்றும், "இந்தத் தளங்களில் இருந்தே சமீபத்தில் தொடங்கப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புகள், அத்தகைய இராணுவ இருப்பு உண்மையில் எவ்வளவு அச்சுறுத்தலானது என்பதை நிரூபித்துள்ளன" என்றும் அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலின் பினாமி
இயற்கையாகவே, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும் தனது தற்காப்புத் திறன்களை வலுப்படுத்துவதைக் கைவிடாது," என்று பெஷெஷ்கியன் கூறினார்.
ஈரான் செய்ததும், தொடர்ந்து செய்து வருவதும், நியாயமான தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிதானமான பதிலடியே தவிர, அது எந்த வகையிலும் போரையோ அல்லது ஆக்கிரமிப்பையோ தொடங்குவதல்ல.

இந்தப் போர் உண்மையிலேயே அமெரிக்க மக்களின் நலனுக்காகவா என்று பெஷெஷ்கியன் கேள்வி எழுப்பினார்,
மேலும் அமெரிக்கா "இஸ்ரேலின் ஒரு பினாமியாக" போரில் நுழைவதாகக் குற்றம் சாட்டினார். "ஈரானிய அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம், பாலஸ்தீனியர்கள் மீதான தனது குற்றங்களிலிருந்து உலகளாவிய கவனத்தைத் திசை திருப்ப இஸ்ரேல் முயல்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்