ட்ரம்ப்பிற்கு அதிரடி பதிலடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்
ஈரானுக்கு எதிரான போர் தனது போர் அல்ல என்றும், அதில் தான் சிறிதும் ஈடுபடப் போவதில்லை என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு பதிவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
ஈரான் போருக்கு பங்களிக்காத நாடுகள் தாங்களாகவே போரிட்டு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா இனி அந்த நாடுகளுக்கு ஆதரவளிக்காது என்றும் அமெரிக்க ஜனாதிபதி அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார்.
மீண்டும் திறப்பதற்கும் அழுத்தம்
ஈரானுக்கு எதிரான போரில் ஐரோப்பிய நாடுகள் சேராததால், அந்நாடுகளுடனான நேட்டோ இராணுவக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறியிருந்த அறிக்கை குறித்தும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் கருத்து தெரிவிக்கையில், இது நமது போர் அல்ல. அதேபோல, மத்திய கிழக்கில் நடக்கும் இந்தப் போர் நமது தேசிய நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் பிரித்தானிய இதில் ஈடுபடாது.
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நாம் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள வழி, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கும், எரிசக்திக்கு மிகவும் இன்றியமையாத பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதே ஆகும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ராஜதந்திர முயற்சிகளை வரவேற்கிறோம். அதற்காக, எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ராஜதந்திர வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வாரத்தின் பிற்பகுதியில், வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் முதன்முறையாக மத்திய கிழக்கில் போரில் ஈடுபடும் நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்பதை இன்று நான் அறிவிக்கிறேன்.
எரிபொருள் கட்டணங்கள்
அந்தக் கூட்டத்தில், கப்பல் போக்குவரத்தின் சீரான நிலைமையை மீட்டெடுக்கவும், சிக்கியுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் தேவையான அனைத்து ராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வோம்.

வளைகுடா முழுவதும் கடல்சார் பாதுகாப்பிற்காக ஒன்றாகச் செயல்படும் நமது நோக்கத்திற்காக பிரித்தானிய இப்போது 35 நாடுகளை ஒன்றிணைத்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இன்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.
பட்ஜெட்டில் நாம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, இன்று நமது எரிபொருள் கட்டணங்கள் குறைக்கப்படும்.ஈரானில் என்ன நடந்தாலும், இந்த விலை இப்போது ஜூலை வரை நிலையாக இருக்கும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்