ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பெரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி, பாரசீக வளைகுடாவில் உள்ள கப்பல்களுக்கு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதியின்றி செல்ல முயற்சிக்கும் எந்தக் கப்பலும் அழிக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதை முன்னணி கப்பல் தரகு நிறுவனமான SSY உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு வானொலி செய்திகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
லெபனான் மீதான தாக்குதல்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, இந்த நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர்கள் செல்ல அனுமதிப்பதாகும்.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இன்று காலை ஈரானின் அனுமதியுடன் இரண்டு எண்ணெய் டேங்கர்கள் சென்றதாகவும், ஆனால் அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் தனது தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிற நிலையில், இதானால் பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறிந்துபோகும் கடுமையான அபாயங்கள் காணப்படுவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |