கமேனியின் உரை நிகழ்த்தும் விதத்தை நினைவுபடுத்தும் ஈரானின் மேடை அமைப்பு
தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆற்றிய நீண்ட உரைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒரு மேசை மற்றும் ஒலிவாங்கியுடன் கூடிய ஒற்றை நாற்காலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள தனது வளாகத்தில், ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரு சபை மண்டபமான ஹுசைனியாவிலிருந்து கமெனி ஆற்றிய நீண்ட உரைகளுக்காகப் புகழ் பெற்றிருந்தார்.
அவரது உரைகள் வழக்கமாக ஈரானிய அரசு ஊடகங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவை பெரும்பாலும் மேற்கத்திய வெளியுறவுக் கொள்கையை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கையை விமர்சித்திருந்ததாய் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிச் சடங்கு
இதன்படி ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானில் கூடியுள்ளனர்.

கிராண்ட் மொசல்லாவில் கண்ணாடிப் பெட்டிக்குக் கீழே அயதுல்லா அலி கமேனியின் உடல் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் ஈரானிய மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்