அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு
பாரசீக வளைகுடாப் பகுதிக்கு மேலுள்ள ஈரானிய வான்வெளியை மீறிய அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஒரு F-35 போர் விமானத்தைப் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), செவ்வாயன்று வயிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டது
" அமெரிக்க இராணுவம்", அப்பகுதியில் தனது தலையீடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ஈரானிய வான்வெளியில் நுழைந்ததாகவும், துல்லியமான உளவுத்துறை கண்காணிப்பிற்குப் பிறகு ஐ.ஆர்.ஜி.சி வான் பாதுகாப்புப் பிரிவுகள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி வான் பாதுகாப்புப் படைகள் ஒரு MQ-9 ஆளில்லா விமானத்தைக் கண்டறிந்து அழித்தன. மேலும், ஈரானியப் படைகள் ஒரு RQ-4 ஆளில்லா விமானம் மற்றும் ஒரு F-35 போர் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அவை தப்பி ஓடி ஈரானின் வான்வெளியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டன என்றும் அது மேலும் கூறியுள்ளது.
பதிலடி கொடுக்கும் உரிமை
மேலும், "அமெரிக்க இராணுவத்தால் செய்யப்படும் எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமையை" தாங்கள் கொண்டுள்ளதாகவும் அந்தப் படை கூறியுள்ளது.

செவ்வாயன்று முன்னதாக, ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ், ஙோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள லராக் தீவின் தெற்கே, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானியக் கப்பல்களைத் தாக்கியதாகவும், அதில் "பல ஈரானியர்கள்" கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டது.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஈரான் பதிலடி கொடுத்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |