அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்! பதிலடியை அறிவித்தார் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன 'அப்பாச்சி' (Apache) ரக உலக்குவானூர்தியை ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு அமெரிக்கா நிச்சயமாக பதிலடி கொடுத்தே தீர வேண்டும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று இரவு ஹார்முஸ் நீரிணைக்கு மேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவத்தினர் தனக்குத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பதிலடி
இதில் இரண்டு விமானிகள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அவர்கள் இருவரும் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஓமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த இரண்டு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது விளக்கமும் வெளியிடப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்