தொடரும் தாக்குதல் : வான்வெளியை மூடிய இஸ்ரேல்
ஈரான் (Iran) மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் (Israel) தனது வான்வெளியை மூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று (21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தப்பட்டு, போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள்
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"தாக்குதல் நடவடிக்கையின் தொடக்கத்தில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது," என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
