அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி!
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி நெருக்கத்தை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்னும் சில வாரங்களிலா அல்லது மாதங்களிலா உடன்பாடு எட்டப்படும் என்று சொல்வது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடுகள்
டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் ஆழமானவை மற்றும் கணிசமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு உடன்பாட்டை நெருங்கிவிட்டோம் என்ற நிலையை நாம் எட்டிவிட்டதாக இப்போதைக்குக் கூறிவிட முடியாது.

தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முழு கவனமும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே உள்ளது.
அணுசக்தி விவகாரம் தொடர்பான விவரங்கள் எதுவும் இந்த மேடையில் விவாதிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |