களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு
ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வகையில், உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்சத் திட்டத்தை சீனாவும் பாகிஸ்தானும் முன்வைத்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு சீனாவின் ஆதரவைக் கோருவதற்காக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சிககள்
அதன்போது, அமைதியை வலியுறுத்துவதில் இரு நாடுகளும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்களிடம் எண்ணெய் கையிருப்பு போதுமான அளவு இருப்பதனால் ஈரானில் நடக்கும் போருக்கு சீனாவின் பதில் இதுவரை மிகவும் மென்மையாகவே இருந்து வருகிறது.
சீனாவின் அச்சம்
ஆனால், இந்த நெருக்கடி தொடர்ந்தால், உலகின் முக்கிய உற்பத்தியாளராக விளங்கும் சீனாவின் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்குப் பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

Image Credit: TIME
ஈரானில் நடக்கும் போர், ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெரிதும் விரும்பும் ஸ்திரத்தன்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, மோதல் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சீன அரசாங்கம் போர் நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்