ட்ரம்ப் மீது நீடித்த ஈரானிய படுகொலை சதித்திட்டத்தின் காத்திருப்பு ஆட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்தகவலைத் தொடர்ந்து, துருக்கியில் இருந்து ட்ரம்பை இரகசியமாக வேறு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற பின்னர், ட்ரம்ப் வழக்கமாக பயன்படுத்தும் Air Force One விமானத்தில் பயணம் செய்யாமல், சிறிய இராணுவ விமானத்தில் இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் முன்னதாக வெளியாகின.
ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை அவரே நேற்று உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு அதிகாரிகளும் இராணுவத்தினரும் வேறு விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதால் தான் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவிதத்தார்.
எதிரிகளால் கண்டறிய முடியாத திட்டம்
ட்ரம்ப் இரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் வழக்கமாக பயணிக்கும் Air Force One தொடர்ந்து பயணித்ததாக அன்றைய அறிக்கைகள் விளக்கியிருந்தன.

இதன் மூலம் ட்ரம்ப் உண்மையில் எந்த விமானத்தில் இருக்கிறார் என்பதை எதிரிகளால் கண்டறிய முடியாத வகையில், Air Force One ஒரு ‘டிகாய்’ (Decoy) விமானமாக பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பை சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் விமான நிலைய கேட்டரிங் வாகனமும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பை டிரம்பை குறிவைத்து வெப்பத்தைத் தேடி தாக்கும் ஏவுகணை போன்ற ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் தகவல் கிடைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தகவலில் உடனடி தாக்குதல் திட்டம் இருப்பது உறுதியாகவில்லை. மேலும், அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடையே வேறுபட்ட மதிப்பீடுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க SECRET SERVICE இந்த ஆண்டில் மட்டும் ட்ரம்ப் உள்ளிட்ட பாதுகாப்பு பெறும் முக்கிய அதிகாரிகளை குறிவைத்த 10,000 அச்சுறுத்தல் வழக்குகளை விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SECRET SERVICE அறிக்கை
இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய அச்சுறுத்தல் சூழல் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக இருப்பதாகவும் SECRET SERVICE எச்சரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதிலிருந்து, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக ஈரான் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக, ட்ரம்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது முன்னெப்போதையும் விட கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்பை குறிவைத்து உண்மையான தாக்குதல் திட்டம் இருந்ததா என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், அச்சுறுத்தலை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த தீவிரத்துடன் அணுகி வருவது இந்தச் சம்பவம் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ட்ரம்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானப் பயணத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் மற்றும் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பின் சொத்துக்களுக்கு அருகிலும் விமான எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ட்ரோன் மற்றும் குறைந்த உயரத்தில் வரும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ட்ரம்பின் விமானத்தை மாற்றிய சம்பவம், ஈரான் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியை தாக்கும் திறன் கொண்டதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
ஒருபுறம், ஈரானுடன் தொடர்புடைய முன்னைய படுகொலை சதி முயற்சிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உள்ளன.
மறுபுறம், சமீபத்திய உளவுத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடையே சந்தேகம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, ட்ரம்பை குறிவைத்து உடனடி தாக்குதல் திட்டம் இருந்தது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், சாத்தியமான அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருப்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |