இலங்கை நோக்கி வந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது இந்திய படை
இலங்கையை நோக்கி பெருமளவு ஹெரோயின் போதைப்பொருட்களுடன் வந்த ஈரானிய படகு குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
டைம்ஸ் ஒப் இந்தியா தகவல்படி, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு (ஏடிஎஸ்) ஈரானில் உள்ள துறைமுகத்திலிருந்து படகு புறப்பட்டு இலங்கை நோக்கி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது.
"சில அறியப்படாத காரணங்களுக்காக படகு இலங்கையின் கடலுக்குள் செல்ல முடியவில்லை, அது இந்திய கடற்பரப்பை நோக்கி சென்றது, அதன் பிறகு அது ATS மற்றும் ICG பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பிடிபட்டது" என்று ATS அதிகாரி மேற்கோள் காட்டினார்.
‘அவுட்லுக் இந்தியா’ தெரிவிக்கையில், சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 30 முதல் 50 கிலோ வரை மதிப்பிடப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
படகில் இருந்த ஏழு பணியாளர்கள்,அவர்கள் அனைவரும் ஈரானிய பிரஜைகள் எனவும் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.