ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா…!வெளியுறவு அமைச்சரின் கருத்தால் சந்தேகம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார் என ஈரான்வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தெஹ்ரானில் இருந்து NBC செய்திக்கு அளித்த பிரத்யேக நேரடி நேர்காணலில் இதனை அவர் கூறினார்.
தாக்குதல்களில் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டனர், ஆனால் நீதித்துறைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் உட்பட மற்ற மூத்த அதிகாரிகள் உயிர் பிழைத்ததாக அரக்சி தெரிவித்தார்.
பேச்சு நடக்கும்வேளை தாக்குதல்
"அனைத்து உயர் அதிகாரிகளும் உயிருடன் உள்ளனர்," என்று அவர் கூறினார். "எனவே அனைவரும் இப்போது தங்கள் நிலையில் உள்ளனர், இந்த சூழ்நிலையை நாங்கள் கையாளுகிறோம், எல்லாம் நன்றாக இருக்கிறது."என அவர் குறிப்பிட்டார்.

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், வோஷிங்டன் மற்றும் டெல் அவிவ் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதாக வெளியுறவு அமைச்சர் விமர்சித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |