ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்கள்
ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள தாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து இந்த கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த முற்றுகைக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன
கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு
ஈரானிய கச்சா எண்ணெய் உலகளாவிய சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் பெஞ்ச்மார்க் ஆகக் கருதப்படும் 'ப்ரெண்ட்' கச்சா எண்ணெயின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78.40 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேசக் கடல் பாதையில் கட்டணம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் நியாயமற்றது என சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் சர்வதேசக் கடல் பாதையில் கட்டணம் வசூலிக்கலாம் என்ற வாதம் முற்றிலும் வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |