திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்!
கொழும்பில் இயந்திரக் கோளாறு காரணமாக தரித்து நின்ற ஈரானிய போர்க்கப்பலானது திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கப்பலானது தற்போது திருகோணமலை உற்துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
2026 மார்ச் தொடக்கத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் குறித்த கப்பல் சிக்கியிருந்தது.
மனிதாபிமான அடிப்படை
'IRIS Bushehr' என்ற குறித்த கப்பல் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இக்கப்பலில் இருந்த 208 ஈரானிய கடற்படையினர் மீட்கப்பட்டு, வெலிசறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனுடன் வந்த IRIS Bushehr துணைக்கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் உதவி கோரியது.
இதன் பின்னர் கப்பலில் இருந்த 208 பணியாளர்கள் (53 அதிகாரிகள், 84 கெடட் அதிகாரிகள், 48 சிரேஷ்ட கடற்படையினர், 23 கடற்படையினர்) பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அநுரகுமார திசாநாயக்க
குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அனுமதியுடன், கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பணியாளர்கள் வெலிசறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நடுநிலை நாட்டில் போர்க்கப்பல் தடுத்து வைக்கப்பட்ட முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |