அமெரிக்காவிலிருந்து ஈரானுக்கு கிடைக்கப்போகும் பாரிய வெகுமதி
யுரேனியம் செறிவூட்டலை ஈரான் முற்றிலும் கைவிட்டால்,அமெரிக்கா ஈரானுக்கு பாரிய சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அமெரிக்கா தீவிரம் காட்டிவருகின்றது
ஏராளமான சலுகைகளை அளிக்க முன்வந்துள்ள ட்ரம்ப் நிர்வாகம்
இதன்படி அணு மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு, ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரான் பணம் 6 பில்லியன் டொலர் விடுவிக்கப்படும், அமெரிக்கா குண்டு வீசி அழித்த போர்டோ யுரேனியம் செறிவூட்டல் மையம், அணுமின் சக்தி நிலையமாக மாற்றப்படும் என ஏராளமான சலுகைகளை அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறுகையில், ‘‘ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட வேண்டும்
யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட்டு அணு மின்சக்தி திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
