போர் நிறுத்தத்தை அங்கீகரிக்காத ஈரான் உச்ச தலைவர் : மீண்டும் பதற்றம்
ஈரானிய ஜனாதிபதி உட்பட மூத்த அதிகாரிகள் மற்றும் அமைப்புகள், , ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நேற்றையதினம் உறுதிப்படுத்தின.
இருப்பினும், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இதுவரைபோர் நிறுத்தம் தொடர்பில் எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டவர்
உச்ச தலைவர் அரசு தொடர்பான விடயங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கண்கள் போர் நிறுத்தம் குறித்து அவர் எப்போது கருத்து தெரிவிப்பார் என்பதில் கவனம் செலுத்துகின்றன.
கமேனி ,மத்திய தெஹ்ரானில் உள்ள தனது வழக்கமான இல்லத்தை விட்டு வெளியேறி, இப்போது ஒரு பாதுகாப்பான பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.
ட்ரம்பின் சரணடைதலை நிராகரித்தார்
அவர் கடைசியாக ஜூன் 18 அன்று அரசு தொலைக்காட்சியில் முன் பதிவு செய்யப்பட்ட செய்தியில் தோன்றினார், அதில் அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பின் தெஹ்ரானின் "நிபந்தனையற்ற சரணடைதல்" என்ற அழைப்பை நிராகரித்தார்.
X இல் அவரது அதிகாரபூர்வ கணக்குகள் போர் நிறுத்தத்திற்கு முன்பு செயலில் இருந்தபோதிலும், ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, தாக்குதலுக்குப் பிறகு மற்றொரு முன் பதிவு செய்யப்பட்ட செய்தி ஒளிபரப்பப்பட்டதிலிருந்து அவர் பொதுவில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
