இலங்கைக்கு அருகே தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்! அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி
இலங்கை கடற்கரைக்கு அருகே ஒரு ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்தது குறித்து இராணுவ அதிகாரிகளிடம் தான் கேள்வி எழுப்பியதாக கூறியுள்ளார்.
அந்தக் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக அதை அழித்துவிடுவது “மேலும் சுவாரஸ்யமானது” மற்றும் “பாதுகாப்பானது” என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இறப்பு எண்ணிக்கை மாறுபட்டாலும், ஈரானின் அரசு ஊடக அமைப்பான IRNA ஞாயிற்றுக்கிழமை “மார்ச் 4 ஆம் திகதி இந்தியப் பெருங்கடலில், இந்தியா நடத்திய Milan Peace 2026 கடற்படை பயிற்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று IRIS Dena என்ற ஈரான் போர்க்கப்பலை டார்பிடோவால் தாக்கியதில் 104 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இராணுவ நடவடிக்கை
இது குறித்து சமீபத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,

“இந்த நடவடிக்கை, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுவரும் விரிவடைந்துவரும் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
“ஏன் நாம் அவர்களை கொன்றோம்? ஏன் அவர்களை பிடித்து எங்கள் கடற்படையில் பயன்படுத்தவில்லை?” எனநான் கேட்டேன்.
IRIS Dena என்பது “மிக உயர்ந்த தரமான” கப்பல் என்று இராணுவம் விவரித்தது.
அந்தக் கப்பலை அழித்துவிடுவது சிறந்தது என்று ஒரு இராணுவ அதிகாரி பதிலளித்தார்.
மூழ்கடிப்பது இன்னும் சுவாரஸ்யம்
அவர்கள் சொன்னார்கள், அவர்களை மூழ்கடிப்பது இன்னும் சுவாரஸ்யம்,” என்று. ஈரானின் கப்பல் மூழ்குவது எமது இராணுவத்துக்கு அதிகம் பிடிக்கும். அதை மூழ்கடிப்பது பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள் அது உண்மையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.” என கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
விமர்சகர்கள் மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்கள், இவ்வகையான கருத்துக்கள் பல உயிர்களை காவுகொண்ட தாக்குதலை மிக அலட்சியமாக நியாயப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரானிய அதிகாரிகள், குறிப்பாக துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே, அந்தப் போர்க்கப்பல் ஆயுதமற்றதாகவும் எந்த ஆயுதச் சுமையும் இல்லாமல் இந்தியா வங்காள விரிகுடாவில் நடத்திய பன்னாட்டு கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் இருந்ததாகவும் தெரிவித்ததுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 20 மணி நேரம் முன்