சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா..! ஜே.வி.பி மீது கண்வைக்கும் எம்.பி
Puttalam
Sanath Nishantha Accident
By Jaso
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் விபத்தில் இறந்தாரா அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஜே.வி.பியைச் சேர்ந்தவர்கள் அற்பமான கருத்துக்களை
உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் ஜே.வி.பியைச் சேர்ந்தவர்கள் மிகவும் அற்பமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் அதனால்தான் இந்த சந்தேகம் அதிகமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக புத்தளத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி