கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : நாட்டைவிட்டு பறந்த செவ்வந்தி
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் மூளையாகச் செயல்பட்டதாக தேடப்படும் இஷாரா செவ்வந்தி, மாலைத்தீவுக்குத் (Maldives) தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல் தலைவரால் அவர் கடல் வழியாக மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்குப் பின்னர், அவரைத் தேடி நாடு முழுவதும் ஏராளமான காவல்தறை குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பாதுகாப்புப் படையினர்
இந்தநிலையில், செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தால், அவரைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் படையினர் முன்பே இந்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான பிண்ணனியில் தற்போது அவர் மாலைத்தீவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்