40 நாளில் ஈரானை சுடுகாடாக்கிய இஸ்ரேல் : வெளியான தாக்குதல் விபரம்
ஈரானுக்கு எதிராக 10,800-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.40 நாள் நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான முக்கிய, இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன என இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து தொடங்கப்பட்ட போரின் போது, ஈரானுக்கு எதிராக 10,800-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை(10) கூறியது.
4,000 முக்கிய இலக்குகள் மற்றும் 6,700 இராணுவ தளங்கள் அழிப்பு
வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏப்ரல் 8 அன்று தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்படும் வரை நடந்த நடவடிக்கைகளின் விவரங்களை இராணுவம் பகிர்ந்து கொண்டது.

சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த வான்வழி நடவடிக்கையின் போது, ஈரானில் உள்ள 4,000 முக்கிய இலக்குகள் மற்றும் 6,700 இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதாகவும், டசின் கணக்கான போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதாகவும் அது கூறியது.
இந்தத் தாக்குதல்களில் 18,000-க்கும் மேற்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது; இது கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட 12 நாள் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |