கழுத்துக்கு வந்த கத்தி : ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல்
ஈரானின் (Iran) தற்போதைய ஆட்சியை சரணடைய வைக்கும் படியான காய்நகர்த்தல்களைச் செய்துவருகின்றன இஸ்ரேல் (Israel)
ஒருபக்கம் ஈரானின் இராணுவக் கட்டளைத் தலைமைகளை கூண்டோடு அழித்து ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கிக்கொண்டு, ஈரானின் இராணுவ இலக்குகளையெல்லாம் தேடி தேடி அழித்து ஈரானின் கரங்களை ஒவ்வொன்றாக உடைத்துக்கொண்டு, சம காலத்தில் ஈரானின் தலைமையைக் குறிவைத்து ஒரு முக்கியமான உளவியல் யுத்தத்திலும் இஸ்ரேல் ஈடுபட்டு வருகின்றது.
ஈரானை இஸ்ரேலிடம் அல்லது மேற்குலகிடம் சரணடையவைக்கும்படியான ஒரு புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்லுகின்ற காரியத்தைத்தான் - தமது சைகோலஜிகள் ஒப்பரேஷன்ஸ் மூலமாகச் செய்துகொண்டிருக்கின்றார்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தரப்பினர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்று விட்டு ஈரானில் புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இஸ்ரேல் வியூகம் வகுத்து வருவதாக போரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஈரானில் தொடரும் பதற்றம் காரணமாக ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதாள அறையில் குடும்பத்துடன் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், அவரை அழிக்க எங்களால் முடியும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ள.
இந்த விடயம் பற்றி முழுமையாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய ‘உண்மையின் தரிசனம்’நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
