இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி : ஐ.தே.கவின் நிலைப்பாடு வெளியானது
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டு நாடுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்திலிருந்தே அந்த நோக்கத்திற்காகச் செயல்பட்டு வருவதாகவும் அபேவர்தன கூறினார்.
தெளிவுபடுத்திய ரணில்
இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி குறித்த உண்மைகளை முன்வைக்க கொழும்பில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இவ்வாறு தெரிிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடியில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தெளிவான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாகவும், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் அபேவர்தன கூறினார்
இரண்டு நாடுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்
"அழிந்து வரும் மனித உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நாங்கள் நிதி உதவியையும் வழங்கியுள்ளோம்.
மேற்கத்திய உலகமும் அவ்வாறே செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டு நாடுகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து பராமரித்து வருகிறது," என்று வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
